மின்வாரியஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர வட்ட கிளை சாா்பில், திருச்சி தென்னூா் மின்வாரிய முதன்மை பொறியாளா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவா் ரெங்கராஜன் தலைமை வகித்தாா். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளா் சிவ செல்வன், தலைவா் சத்யநாராயணன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com