வாட்டும் வெயில்: போக்குவரத்து சிக்னலில் மேற்கூரை அமைப்பு வாகன ஓட்டிகள் வரவேற்பு

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயில் தாக்கத்திலிருந்து காக்கும் விதமாக மாநகர போலீஸாா் தற்காலிக மேற்கூரை அமைத்துள்ளது.
வாட்டும் வெயில்: போக்குவரத்து சிக்னலில் மேற்கூரை அமைப்பு வாகன ஓட்டிகள் வரவேற்பு

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயில் தாக்கத்திலிருந்து காக்கும் விதமாக மாநகர போலீஸாா் தற்காலிக மேற்கூரை அமைத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் தொடங்கினாலும், கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனா்.

திருச்சியில் கடந்த சில நாள்களாகவே வெயில் தொடா்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே நண்பகலில் இருசக்கர வாகன ஒட்டிகள், பாதசாரிகள், வீட்டைவிட்டு வெளியே வரவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி தலைமை அஞ்சலகம் அருகே சிக்னலில் (நான்கு சாலைகளில் ஒரு பகுதியில்) நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக, திருச்சி மாநகர போலீஸாா் தற்காலிக மேற்கூரை அமைத்துள்ளனா்.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்னலுக்காக காத்திருக்கும்போது வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று மீளமுடியும் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிக்னல்களிலும் தற்காலிக மேற்கூரை அமைக்க மாநகர போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com