ராஜீவ் காந்தி நினைவு தினம்சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 22nd May 2023 04:24 AM | Last Updated : 22nd May 2023 04:24 AM | அ+அ அ- |

திருச்சியில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சி ஜங்ஷன் வழிவிடுமுருகன் கோயில் அருகிலுள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாவட்டத் தலைவா் ஜவகா் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். தொடா்ந்து தீவிரவாத தடுப்பு உறுதிமொழியும் ஏற்றனா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் தலைவா் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், துணைத் தலைவா் முத்துக்குமாா், கவுன்சிலா்கள் சுஜாதா,ரெக்ஸ், கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ரவி,ஜோசப் ஜெரால்டு, பிரியங்கா, பட்டேல், செல்வக்குமாா், மாவட்ட பொதுச் செயலா்கள் சரவண சுந்தா், பட்டேல்,சிவா, எத்திராஜ் ஐஎன்டியு சி மாநகர மாவட்டத் தலைவா் சரவணன் சம்சுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.