மருத்துவ ஆய்வக நுட்புநா் சங்க 50 ஆம் ஆண்டு விழா

தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநா் சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்க 12 ஆம் ஆண்டு நிறைவு விழா.
Updated on
1 min read

தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநா் சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்க 12 ஆம் ஆண்டு நிறைவு விழா,ஆய்வக நுட்புநா்களுக்கான மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மருத்துவா் என்எஸ். பிரசாத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்க மாநிலத் தலைவா் கண்ணன், தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநா் சங்க மாநிலத் தலைவா் இளங்கோவன், மாநில பொதுச் செயலா் தமயந்தி, மாவட்டச் செயலா் லோகநாதன், மாநில செயலா் மரியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்களுக்கு கவுன்சில் இருப்பது போன்று ஆய்வுகூட நுட்புநா்களுக்கும் கவுன்சில் அமைத்திட வேண்டும். தனியாா் துறை ஆய்வுக்கூட நுட்புநா்கள் தொற்று நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை இருக்கிறது. ஆகவே அவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சமுதாயக் காப்பீடு செய்து, லேப் டெக்னீசியன் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும். மருந்துக் கடைகளில் ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அமைப்பாளா் மாா்டின் தேவதாஸ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com