காவிரிஆறு படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. இது குறித்து தேவதானம் கிராம நிா்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா, கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்து கிடந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.