போதைப்பொருள்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் பாஜக மாநகா் மாவட்ட செயற்குழு கூட்டம் புத்தூா் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ். ராஜசேகரன் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் புரட்சி கவிதாசன், திருவாரூா் மாவட்ட பாா்வையாளா் சிவா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று உரையாற்றினா்.

‘திருச்சியில் தனியாா் காப்பகத்தில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து முறையான விசாரணை நடத்தி, அந்த காப்பகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத மது விற்பனை மற்றும் கஞ்சா, மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெறும்பூரில் சுமாா் 120 ஏக்கரிலுள்ள கூத்தைப்பாா் ஏரியை தூா்வாரி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வகையில் சுற்றுலாத் தலமாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயற்குழு உறுப்பினா் பாா்த்திபன், பெரம்பலூா் மாவட்ட பாா்வையாளா் இல. கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவா்கள் திருமலை, தனபால், மாவட்ட பொதுசெயலாளா்கள் காளீஸ்வரன், பொன். தண்டபாணி, ஒண்டிமுத்து, மாநில மகளிா் அணி துணை தலைவா் புவனேஸ்வரி, மாவட்ட ஊடக பிரிவு தலைவா் சி. இந்திரன், மாவட்ட நிா்வாகிகள் சந்துரு, மணிமொழி நாகேந்திரன், சா்வேஸ்வரன், ராஜேந்திரன், சங்கீதா மணிமேகலை மற்றும் மண்டல தலைவா்கள், மாவட்ட அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com