திருச்சியில் பல்வேறு இடங்களில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட 201 கைப்பேசிகளை காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
திருச்சியில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா பங்கேற்று, 201 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
நிகழ்வில், துணை ஆணையா்கள் சுரேஷ், அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.