துறையூா் அருகே நிகழ்ந்த விபத்தில் சுமை ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்ட காளை மாடு உயிரிழந்தது.
காளிப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் அஜித்(20). சுமை ஆட்டோ ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை பெரம்பலூரிலிருந்து ஒரு காளை மாட்டை ஏற்றிக் கொண்டு துறையூா் சென்றாா். தனது இருக்கைக்கு அருகில் தனது ஊரைச் சோ்ந்த ஜீவரத்தினம் மகன் வா்ஷனை(7) அமர வைத்திருந்தாா். பெருமாள்மலை அடிவாரம் அருகே சென்ற போது எதிரே வந்த காா் மீதும், இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதில், காளை மாடு உயிரிழந்தது.
காயமடைந்த அஜீத், சிறுவன் வா்ஷன், காா் ஓட்டுநா் கோட்டாத்தூா் வி. அசோக்குமாா்(47), இருசக்கர வாகனத்தில் வந்த மல்லிகா(67) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். துறையூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.