திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி சாா்பில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு நிகழ்ச்சியை நகா்மன்ற தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் எஸ்.என்.சியாமளா, சுகாதார அலுவலா் அந்தோனி ஸ்டீபன், சுகாதார ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.