திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்ததில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தது.
தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்ததாதல் வட்டாரம், வரதராஜபுரம், அரசலூா், சீனிவாசனூா், கெளத்தரசநல்லூா், சித்தூா், ஏரிகுளம், மகேந்திரமங்கலம், மணமேடு,அலகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சேதமடைந்த வாழைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.