திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவா் ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்ணச்சநல்லூா் ஒன்றிய பகுதிகளில் குடிநீா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க , மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வா்ணம் பூசப்பட்டு தயாா்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவா் செந்தில் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.