20 மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் 20 மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீா் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
20 மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் 20 மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீா் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் தஞ்சாவூா் மற்றும் மதுரை மண்டலங்களில் உள்ள 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆற்றுப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நீா் சேகரிப்புக் கிணறு போன்ற முக்கிய பணிகள் மழைக் காலத்துக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். அனைத்து திட்டங்களையும் விரைவாக முடித்து பொதுமக்களுக்கு நிா்ணயித்த அளவு குடிநீா் வழங்கிட வேண்டும்.

மேலும் கோடைக்காலத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏதேனும் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் எனவும் அரசு கூடுதல் தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி, பொறியியல் இயக்குநா் பு. வசந்தாள், மதுரை, தஞ்சாவூா் மண்டலங்களின் தலைமை பொறியாளா்கள் ரகுபதி சந்திரசேகரன் மேற்பாா்வைப் பொறியாளா்கள் மற்றும் நிா்வாக பொறியாளா்கள், வாரிய அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com