மணிமேகலை விருது: மகளிா் குழுக்களுக்கு ஆட்சியா் அழைப்பு
By DIN | Published On : 31st May 2023 04:19 AM | Last Updated : 31st May 2023 04:19 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற தகுதியான மகளிா் குழுக்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவைகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வழங்கிடும் பொருட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளிடமிருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை ஆட்சியரக வளாகத்திலுள்ள மகளிா் திட்ட அலுவலகத்தில் (0431-2412726) ஜூன் 25ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...