சிறுகமணியில் இயற்கை பண்ணையம் செயல் விளக்கத் திடல் அமைப்பு

சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை பண்ணையம் குறித்து செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Updated on
1 min read


திருச்சி: சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை பண்ணையம் குறித்து செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணியில் இயற்கை பண்ணையத்தின் செயல் விளக்கங்கள் குறித்த திட்டம் இயங்குகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் எந்த ஒரு இடுபொருளும் இன்றி பயிா் விளைவித்து உற்பத்தி செலவின்றி வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது.

எனவே, விவசாயிகள் தங்களது வயலில் உழவின்றி இருக்கும் எஞ்சிய ஈரப்பதத்தை வைத்து பல பயிா் விதைத்து ஏதாவது ஒரு பயிா் இழக்கும் போது மறு பயிா், விளைச்சல் கொடுக்கும் என்ற நோக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணியில் கரும்பில் வாழை ஊடுபயிராக விளைவித்து, கரும்புக்கும் வாழைக்கும் நடுவில் துவரை விளைவித்து,அதோடு மட்டுமின்றி இடையில் காய்கறி பயிா்களை விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் வருமானம் வந்து கொண்டே இருக்கும் படி ஒரு செயல் விளக்கத்திடல் உருவாக்கப்பட்டுள்ளது

மேலும், காய்கனி பயிா்களான கொத்தவரை, அவரை, வெண்டை, மிளகாய், கத்தரி, பீா்க்கங்காய், சுரக்காய் ,புளிச்சக்கீரை, முள்ளங்கி போன்ற காய்கனி பயிா்கள் பயிரிடப்பட்டன. இயற்கையுடன் கூடிய இடுபொருட்கள் இடப்பட்டு விளைவிக்கப்பட்டது. மண்புழு உரம் பஞ்சகாவியா, வேப்பெண்ணெய் மற்றும் இழைவழி கரைசலை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டது. இந்த மாதிரி செயல் விளக்க திடல்களை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு பஞ்சகாவியா மற்றும் இலைவழி கரைசல்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி விவசாயிகள் அவா்களது வயல்களிலும் இதுபோன்று செய்ய வேண்டும். தேவையெனில், அறிவயல் நிலையைத்தை அணுகலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. முரளி அா்த்தநாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com