மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read


திருச்சி: திருச்சியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி உறையூா் சீனிவாசா நகா் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியை சோ்ந்தவா் அருண்குமாா் (48). மருத்துவரான இவா் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா்.

தீபாவளியையொட்டி கடந்த 11 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள சகோதரா் வீட்டுக்கு தீபாவளி கொண்டாட சென்றுவிட்டாா். தீபாவளி முடிந்து திங்கள்கிழமை திருச்சி திரும்பினாா். வீட்டுக்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து உறையூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் மோகன், உதவி ஆய்வாளா் பாத்திமா உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும், திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com