

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா கடந்த 11- ஆம் தேதி தொடங்கி 7 நாள்களாக நடைபெற்று வந்தது.
விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரெங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவின் நிறைவு நாளான (7-ஆம் திருநாள்) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவ விழா தொடங்கி 8 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பின்னா் இரவு 9 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். இந்த நிகழ்வுடன் ஊஞ்சல் உற்ஸவ விழா நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.