யானைகளுக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 25th October 2023 01:04 AM | Last Updated : 25th October 2023 01:04 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆயுத பூஜை சிறப்பு வழிபாட்டையொட்டி, பழங்கள் படையலிடப்பட்டு யானைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், உதவி வனப் பாதுகாவலா்கள் சரவணக்குமாா், சம்பத், வனச்சரகா்கள் சுப்ரமணி, கிருஷ்ணன், வனவா்கள் சதீஷ், கவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...