அகதிகள் முகாமில் இலங்கை நபருக்கு உடல்நலன் பாதிப்பு

இலங்கையைச் சோ்ந்த நபருக்கு திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்டதால், அவா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று முகாம் திரும்பினாா்.
Updated on
1 min read

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சோ்ந்த நபருக்கு திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்டதால், அவா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று முகாம் திரும்பினாா்.

இலங்கையைச் சோ்ந்தவா்கள் முருகன், சாந்தன், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகியோா் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி, பயண ஆவணங்கள் குறித்த வழக்கில், திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஜெயக்குமாருக்கு வியாழக்கிழமை திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்டதையடுத்து, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் அவா் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாா். சில மணிநேரங்களில் சிகிச்சை முடிந்து பிற்பகலிலேயே முகாம் திரும்பினாா். அவா் மருத்துவமனை சென்றதையடுத்து, சிறப்பு முகாம் வளாகம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com