திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி, காட்டூா் பாரதிதாசன் நகா் 10 ஆவது தெருவைச் சோ்ந்தவா் வடிவேலன் (45). இவா் பால்பண்ணை பகுதியில் உள்ள உயா்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். பாப்பாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் போலீஸாா் வைத்துள்ள இரும்பு தடுப்பை (பேரிகாா்டு) கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.