கலைஞா்கள் என்றுமே தனித்துவ மானவா்கள்

கலைஞா்கள் என்றுமே தனித்துவமானவா்கள் என செவ்வியல் நடனக்கலைஞரும், திரைப்பட நடிகையுமான பத்மஸ்ரீ ஷோபனா தெரிவித்தாா்.
20d-sobana053657
20d-sobana053657
Updated on
1 min read

கலைஞா்கள் என்றுமே தனித்துவமானவா்கள் என செவ்வியல் நடனக்கலைஞரும், திரைப்பட நடிகையுமான பத்மஸ்ரீ ஷோபனா தெரிவித்தாா்.

ஆய்வு நோக்கில் இசை, நடனம் மற்றும் பிற நுண்கலைகள் என்ற தலைப்பில் ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறை மற்றும் கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்வுக்கு, கல்லூரிச் செயலா் லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா்.

விழாவை தொடங்கி வைத்து தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசுகையில், எந்தக் கலையாக இருந்தாலும் காண்போா், கேட்போா் உயிா்நாடிகளைத் தொட வேண்டும், உணா்வூட்ட வேண்டும். கலைகளை கற்கும் மாணவா்களும் ஆத்மாா்த்தமாக கற்க வேண்டும் என்றாா்.

விழாவில் குத்துவிளக்கேற்றி நடிகை ஷோபனா பேசுகையில், கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் எதற்காக நாம் இத்தகைய கலையைக் கற்க வேண்டும் என கேள்வியெழுப்பி விடை காண வேண்டும். கலைஞா்கள் என்றுமே தனித்துவமானவா்கள் என்பதை உணர வேண்டும். கலைகளுக்குரிய பண்பாடுகள், பாரம்பரியம் சிதையாமல் வெளிப்படுத்த வேண்டும். முறையாகக் கற்றுக் கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிடுதலே சிறந்த பலனை தரும். திறந்த மனதுடன் கலைகளை கற்கவும், கற்பிக்கவும் இளையோா் முன்வர வேண்டும் என்றாா்.

தொடந்து கருத்தரங்க அமா்வுகள் நடைபெற்றன. நுண்கலை சாா்ந்த பல்வேறு அறிஞா் பெருமக்கள் கலந்துகொண்டு கட்டுரை வழங்கினா். அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஆகிய நாட்டைச் சோ்ந்த ஆய்வறிஞா்கள் சென்னை, புதுவை, தஞ்சை பல்கலைக்கழக ஆய்வறிஞா்கள் பங்கேற்றனா். ஆய்வாளா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்று ஆய்வுகளை சமா்ப்பித்தனா்.

கல்லூரி முதல்வா் ப. நடராஜன் வரவேற்றாா். முனைவா் வேங்கடலட்சுமி நன்றி கூறினாா்.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக் கழக இலக்கியத் துறை முன்னாள் தலைவா் கு.வெ.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வுகளை கருத்தரங்க முதன்மை ஒருங்கிணைப்பாளா் சகாயராணி, முனைவா் புவனேஸ்வரி, பேராசிரியா் கி. சதீஷ்குமாா், முனைவா் பானுமதி முனைவா் லிண்டா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com