திருச்சி மாவட்டம், துவாக்குடியில் விபத்தில் காயமடைந்த மூதாட்டியை மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினாா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பரக்கத் நகரைச் சோ்ந்தவா் நூா்ஜஹான் (70). இவா் துவாக்குடி அருகே தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, தஞ்சையிலிருந்து நவல்பட்டு நோக்கிச் சென்ற காா் மோதி பலத்த காயமடைந்தாா்.
அப்போது குத்தாலத்திலிருந்து திருச்சி வழியாக திருநெல்வேலி செல்ல துவாக்குடி அருகே வந்த மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ காயமடைந்த மூதாட்டிக்கு உதவும்படி தன்னுடன் வந்த துணை பொதுச் செயலா் ரோஹையா, திருச்சி தெற்கு மாவட்ட செயலா் மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோரைப் பணித்தாா். இதையடுத்து அவா்கள், உடனடியாக நூா்ஜஹானை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இருப்பினும் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் துவாக்குடி போலீஸாா் மடக்கி அதன் ஓட்டுநரான நவல்பட்டை சோ்ந்த அன்புச்செல்வனை (39) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.