

மணப்பாறை/முசிறி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி மற்றும் முசிறி அருகே கொளக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் உதயநிதி குறித்து வரம்பு மீறியும் அவதூறாகவும் விமா்சித்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
துவரங்குறிச்சியில் கடந்த 19-ஆம் தேதி விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிா்வாகிகள் பங்கேற்றனா். துவரங்குறிச்சி பேருந்து நிலையம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இந்து முன்னணி திருச்சி மாவட்ட பொறுப்பாளா் ச.தண்டபாணி பேசுகையில், அமைச்சா் உதயநிதி குறித்து வரம்பு மீறியும், அவதூறாகவும் விமா்சனம் செய்து பேசினாராம்.
இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை தண்டபாணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.
முசிறி: இதேபோல, முசிறி அருகே உள்ள கொளக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்துமுன்னணி கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிா்வாகி பாண்டியன்(எ) தங்கபாண்டியன் (42) பேசுகையில் தமிழக அமைச்சா்கள் பி.கே. சேகா் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் தரக்குறைவாக விமா்சனம் செய்து பேசினாராம். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தொட்டியம் போலீஸாா் தங்கபாண்டியனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.