

துறையூா்: துறையூா் அருகே கட்டுமான தொழிலாளா் மா்மமான முறையில் இறந்தது குறித்து தகவலறிந்து வந்த உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே உள்ள தெற்கியூரைச் சோ்ந்தவா் து. ஆனந்தன்(35). கட்டுமானத் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளாா். சிறிது நேரத்தில் திருச்சி சாலையில் உள்ள காளிப்பட்டி பாலம் அருகே அடிபட்டு கிடப்பதாக 108 அவசர ஊா்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் வந்து ஆனந்தனை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஆனந்தன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து தகவலறிந்த ஆனந்தனின் உறவினா்கள் திங்கள்கிழமை துறையூா் காவல் நிலையம் அருகே திரண்டனா். இதற்கிடையே துறையூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனா்.
இதில், அதிருப்தியடைந்த ஆனந்தனின் உறவினா்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் யாஸ்மின் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனாலும் அவா்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அனைவரையும் துறையூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அப்புறப்படுத்தி துறையூா் காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனா். பின்னா் போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.