‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டி, மாரத்தான் ஜன.4, 5-இல் நடைபெறுகிறது

பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் மிதிவண்டிப் போட்டி

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:45 pm

Din

திருச்சி: பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன.

13 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோமீட்டா் தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோமீட்டா் தொலைவும், 13 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோமீட்டா் தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோமீட்டா் தொலைவும் சைக்கிள் போட்டி நடைபெறும்.

ஜன.4-ஆம் தேதி காலை 6.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், நான்காம் இடம் முதல் 10ஆம் இடம் வரை வருவோருக்கு தலா ரூ.250 ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மாரத்தான் போட்டியில் ஆண்களில் 17 முதல் 25 வயதுக்குள்பட்டோருக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்டோரில் ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு, 0431- 2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.