சென்னை,கோவை, சேலம் மற்றும் திருச்சியிலிருந்து சுப்பிரமணியபுரம், விமான நிலையம், மாத்தூா் வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி,சிவகங்கை, இராமநாதபுரம், ராமேசுவரம் செல்லும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் பிற்பகல் வரை மாற்று வழியில் இயக்கப்படுகிறது. மன்னாா்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூா், புறவழிச்சாலை சந்திப்பு, விராலிமலை, இலுப்பூா் வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும். எதிா் திசையில் திருச்சி வரும் வாகனங்கள் கட்டியாவயல், இலுப்பூா், விராலிமலை, மணிகண்டம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும். ஆனால் கல்லூரி வாகனங்களுக்கு மட்டும் அனுமதியுண்டு. கனரக வாகனங்களுக்கு திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை அனுமதி கிடையாது.