லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image
துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய தந்தை பெரியாா் அரசு கல்லூரி முதல்வா் பு.சு. விஜயலட்சுமி. உடன் கல்லூரியின் சமூகப் பணி துறைத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்ட
Updated On :8 மார்ச் 2024, 6:15 pm

Din

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் சூ.ச. ரோஸ்மேரி தலைமை வகித்தாா். தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் பு.சு. விஜயலட்சுமி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: பட்டம் பெற்று கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவா்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்களை தகவமைத்துக் கொள்ள தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அன்றாட நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு திறன் மற்றும் தகவல் தொடா்புகளை அதிகரித்து கொள்ள வேண்டும். தங்களை உயா்த்திக் கொண்ட பிறகு சமூகத்திற்கு நன்மை செய்யும் பணிகளை தொடர வேண்டும் என்றாா் அவா். விழாவில், கல்லூரியின் 19 துறைகளைச் சோ்ந்த 654-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனா். கல்லூரியின் சமூகப் பணி துறைத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் விழாவை ஒருங்கிணைத்தனா்.