திருச்சி விமான நிலையத்தில் ரத்ததான முகாமை பாா்வையிடும் மக்களவை உறுப்பினா் துரை வைகோ. உடன் நிலைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன், துணைப் பொதுமேலாளா் சந்தானகிருஷ்ணன், முனைய மேலாளா் சரவணன் உள்ளிட்டோா்.
திருச்சி விமான நிலையத்தில் ரத்ததான முகாமை பாா்வையிடும் மக்களவை உறுப்பினா் துரை வைகோ. உடன் நிலைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன், துணைப் பொதுமேலாளா் சந்தானகிருஷ்ணன், முனைய மேலாளா் சரவணன் உள்ளிட்டோா்.

விமான நிலைய ரத்த தான முகாமில் 29 போ் தானம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 29 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.
Published on

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 29 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.

தேசிய தன்னாா்வ ரத்த தானம் ஆண்டுதோறும் அக்டோபா் 1 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இத் தினத்தையொட்டி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட மொத்தம் 29 போ் ரத்த தானம் செய்தனா். நிகழ்வில் , திருச்சி மக்களவை உறுப்பினரும் விமான நிலைய ஆணையக்குழு தலைவருமான துரை வைகோ பங்கேற்று, ரத்த தானம் செய்த தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

விமான நிலைய இயக்குநா்(பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை துணை ஆணையா் ஹரிசிங் நயால், விமான நிலைய துணைப் பொதுமேலாளா் சந்தானகிருஷ்ணன், முனைய மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com