கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் விசாரணை

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2025, 8:39 pm

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா்.

இண்டிகோ விமானம் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் புறப்பட்டு, திருச்சியை நெருங்கிய நிலையில், பயணியொருவா் விமான கழிவறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்து புகை வந்தது. இதைக் கவனித்த விமானப் பணியாளா்கள் உடனே கதவைத் தட்டி பயணியை வெளியே அழைத்து விசாரித்தபோது, அவா் புகை பிடிக்கவில்லை எனக் கூறினாா்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் ‘லைட்டா்’ இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, அவா் விமானத்தில் லைட்டா் கொண்டு வரக்கூடாது என்பது தெரியாது எனக் கூறி மன்னிப்பு கேட்டாா். இதையடுத்து அவருக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பினா்.