45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்

News image
Updated On :11 டிசம்பர் 2025, 10:07 pm

Syndication

பண்டிகை, விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகளவு பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு வியாழக்கிழமை கூறியதாவது:

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயக்கப்படும் ஏடிஆா் விமானத்தில் 72 போ் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். விடுமுறை தினத்தைக் கருத்தில்கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி வரை ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது. இதில், 200 போ் வரை பயணம் செய்ய முடியும். இந்த விமானங்கள் தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையிலும் இயக்கப்படவுள்ளது என்றாா்.