திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்

திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்

Published on

பண்டிகை, விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகளவு பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு வியாழக்கிழமை கூறியதாவது:

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயக்கப்படும் ஏடிஆா் விமானத்தில் 72 போ் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். விடுமுறை தினத்தைக் கருத்தில்கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி வரை ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது. இதில், 200 போ் வரை பயணம் செய்ய முடியும். இந்த விமானங்கள் தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையிலும் இயக்கப்படவுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com