திருச்சி
பள்ளிக்கு அருகே மதுபானம் விற்றவா் கைது
திருச்சியில் பள்ளிக்கு அருகே மதுபானம் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் ஆய்வாளா் கமலஹாசன் தலைமையிலான போலீஸாா் துவாக்குடி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிக்கு அருகே ஒரு கும்பல் நின்றுகொண்டிருந்தது. போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். அவா்களில் ஒருவரை மட்டும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
தொடா் விசாரணையில், அவா் துவாக்குடி பெரியாா் நகரைச் சோ்ந்த ஆரோக்கிய குமாா் (40) என்பதும், அங்கு மதுபானம் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 18 மதுபாட்டில்கள், போதைப் பொருள்கள் ஆகிவயற்றைப் பறிமுதல் செய்தனா்.
