பாரதிதாசன் பல்கலை.யில் பாரதியாா் பிறந்தநாள் விழா
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியாா் இருக்கை சாா்பில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வேலு. ரஜேஸ்கண்ணன் தலைமை வகித்தாா்.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வா் இ.ஆா்.ரவிசந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘பாரதியாரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் பாரதியாரின் இலக்கியப் பற்று, சுதந்திர வேட்கை மற்றும் சிறப்புகள் குறித்து பேசினாா்.
இதைத் தொடா்ந்து, பாரதியாா் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பாரதியாா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, பாரதியாா் இருக்கை அமைப்பாளா் ஜெ.சந்திரகலா வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியா் அ.கோவிந்தராஜன், பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

