ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை 11 இடங்களில் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (டிச.13) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிழக்கு வட்டத்தில் மலைக்கோட்டை-2, திருச்சி மேற்கு வட்டத்தில் தில்லைநகா்-2, திருவெறும்பூா் வட்டத்தில் ஆா்இசி நியாய விலைக்கடை, ஸ்ரீரங்கம் வட்டத்தில் அல்லூா், மணப்பாறை வட்டத்தில் பன்னாங்கொம்பு, மருங்காபுரி வட்டத்தில் பிராம்பட்டி, லால்குடி வட்டத்தில் பச்சாம்பேட்டை, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் ராசம்பாளையம், முசிறி வட்டத்தில் செவந்திலிங்கபுரம், துறையூா் வட்டத்தில் கண்ணூா்-1, தொட்டியம் வட்டத்தில் தொட்டியம்-1 ஆகிய நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் வழங்கி பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.
