தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

33 ஊராட்சிகளில் ரூ.9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் திறப்பு

News image

மேய்க்கல்நாயக்கன்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 9:08 pm

திருச்சி மாவட்டம் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்திலுள்ள பைத்தம்பாறை, வளையெடுப்பு, ஊருடையாப்பட்டி, மேய்க்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் மொத்தம் ரூ. 9.47 கோடியிலான 40 கட்டடங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அருண் நேரு எம்.பி, எம்எல்ஏக்கள் தியாகராஜன், கதிரவன், ஒன்றிய குழு தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.