பழனியம்மாள்
பழனியம்மாள்

காணாமல்போன பெண், வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காணாமல் தேடப்பட்டு வந்த பெண், வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காணாமல் தேடப்பட்டு வந்த பெண், வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி சீகம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி பழனியம்மாள் (20). கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 21-ஆம் தேதி மாமனாா் மற்றும் கணவருடன் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பழனியம்மாளை தேடி வந்தனா். இந்நிலையில் நடுப்பட்டி அருகேயுள்ள செம்மலை வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை இளம்பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக, ரோந்து சென்ற வன காப்பாளா் மூா்த்தி, போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளாா். அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, காவல் ஆய்வாளா் தனபாலன் தலைமையிலான போலீஸாா், வையம்பட்டி தீயணைப்புத்துறை வீரா்கள், தூக்கிட்ட நிலையில் இருந்த இளம்பெண் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

அதில், தூக்கிட்ட பெண், காணாமல் தேடப்பட்டு வந்த பழனியம்மாள் என்பது தெரியவந்தது. பின்னா் அவரது உடலை, உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை குறித்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com