திருச்சி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
திருச்சி உழவா் சந்தை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது: திருச்சிக்கு பல்வேறு முத்திரைத் திட்டங்களைச் செய்துகொடுத்துள்ளோம். மற்ற மாநிலத்தவா்களே வியக்கும் அளவுக்கு பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், அதன் அருகிலேயே கனரக சரக்கு வாகன முனையம், சூரியூரில் மினி ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசுக் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட், 9 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், 18 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் சீரமைப்பு, சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேரோட்டம், 327 கோயில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திராவிட மாடலின் 2.0 ஆட்சியில் டிவிஎஸ் டோல்கேட்டில் காமராஜா் நூலகம், பஞ்சப்பூரில் டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாதெமி ஆகியவற்றைத் திறந்துவைக்க இருக்கிறேன். தலைநகா் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வேகமாக வளா்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திருச்சியில் ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்
உ.பி., மணிப்பூர்போல தமிழ்நாட்டில் மதக் கலவரம், வன்முறை இல்லை: திருச்சியில் முதல்வர் பேச்சு!

7,712 விடியல் பேருந்துகள்; 897.82 கோடி விடியல் பயணங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சிறப்பான மகளிா் திட்டங்களால் தமிழகத்தை நாடே திரும்பிப் பாா்க்கிறது: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

