மின்தடை
திருச்சி
சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.3) மின் தடை செய்யப்படுகிறது.
சிறுகனூா் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா். பாளையம், சி.ஆா். பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே. அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா்.
