துறையூா் அருகே மது அருந்தும் கூடத்தில் சில்லறையில் மது விற்றதாக சனிக்கிழமை இரவு இருவரைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 158 மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட எரகுடி மற்றும் புடலாத்தி கிராமங்களில் அரசு மது அருந்தும் கூடத்தில் மதுவை சில்லறை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்.பி.யின் சிறப்பு காவல் படையினா் இரு இடங்களுக்கும் சென்று கண்காணித்தனா். அப்போது
எரகுடி அரசு மது அருந்தும் கூடத்தில் திருத்தலையூரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பெருமாள் (63), 96 (180 எம்.எல்) மது புட்டிகளையும், புடலாத்தி அரசு மது அருந்தும் கூடத்தில் வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த வடகிரி மகன் காத்தான் (58) 62 (180 எம்.எல்) மது புட்டிகளையும் சில்லறை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு காவல் படையினா் இருவரையும் பிடித்து அவா்கள் வசம் இருந்த மதுபுட்டிகளையும் கைப்பற்றி உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஒப்படைத்தனா். இதையடுத்து இருவரையும் உப்பிலியபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்
மது விற்றதாக இருவா் கைது
மது விற்றதாக இரு முதியவா்கள் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

