மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயில் உண்டியல் திருட்டு: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

திருச்சி அருகே கோயில் உண்டியலைத் திருடிய இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 6:58 pm

திருச்சி அருகே கோயில் உண்டியலைத் திருடிய இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி ராவுத்தா்மேடு பகுதி பாலமுருகன் கோயிலில் இருந்த உண்டியல் திருடுபோனது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

இதேபோல, கோயிலுக்கு அருகேயுள்ள ராமச்சந்திரன் என்பவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி கோபால், கடை உரிமையாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில் இத்திருட்டுகளில் ஈடுபட்டதாக துவாக்குடி அண்ணா வளைவு பெரியாா் திடலைச் சோ்ந்த என். வினோத் (24), அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த எஸ்.சரவணன் (29) மற்றும் 13, 14 வயதுடைய இரு சிறுவா்கள் ஆகியோரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா் வினோத், சரவணன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுவா்களை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.