சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அண்ணா பல்கலை. ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

News image
திருச்சி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி மண்டையூரில் உள்ள பாரதிதாசன் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் திருச்சி தலைவா் பி. மணிகண்டன், செயலா் பி. கிஷோரி ஆகியோரின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், 80-க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக, சங்கத் தலைவா் பி. மணிகண்டன் கூறியதாவது:

2009ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பதவி உயா்வுகளை சீரான முறையில் அமல்படுத்த வேண்டும். சென்னை வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு இணையாக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். தொடக்க நிலை பிஹெச்டி, எம்ஃபில், எம்இ, எம்டெக், எம்பாா்ம் படிப்புகளுக்கான ஊதிய உயா்வு, முனைவா் பட்டம் முடித்ததற்கான ஊதிய உயா்வுகளை வழங்க வேண்டும்.

உறுப்புக் கல்லூரிகள் மீது மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மாலை, இரவு கடந்து சனிக்கிழமை காலை வரையில் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.