திருச்சியில் வீட்டருகே இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி பெரிய மிளகுபாறையைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இவா் மது அருந்திவிட்டு அப்பகுதியில் அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை காலையில் தினேஷ் உயிரிழந்து கிடந்துள்ளாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா், தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


