ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

திருச்சியில் இளைஞா் சடலம் மீட்பு

News image
பலி- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் வீட்டருகே இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பெரிய மிளகுபாறையைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இவா் மது அருந்திவிட்டு அப்பகுதியில் அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை காலையில் தினேஷ் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா், தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.