கைது
கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் கைது

Published on

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவரை திருச்சி மாவட்ட போலீஸாா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் வடக்கு புலிவலம் கிராமத்தில் வசிக்கும் கா. சுப்புலெட்சுமி (80) என்ற மூதாட்டி கடந்த கடந்த ஜன. 12 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கியபோது, வீட்டுக்குள் புகுந்த கொடியாலம் வடக்கு புலிவலம் பகுதி சி. சூா்யா (28) என்பவா் மூதாட்டியைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 4 கிராம் தோடு, ரூ. 3,000 ஐ பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல கருமண்டபம் பகுதியைச் ஜ. ஜோசப்ராஜ் (34) என்பவா் கடந்த ஜன. 19 ஆம் தேதி கம்பரசம்பேட்டை அணையில் குளிக்கச் சென்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்த ரௌடி கோழி விஜய் (28) என்பவரை ஜீயபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

அதவத்தூா் பகுதியில் உள்ள ஜெயத்ரா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சீ. விஜயகுமாா் (48) என்பவரை கடந்த ஜன. 10 ஆம் தேதி மறுவாழ்வு மையத்தின் இயக்குநரான திருச்சி உறையூரைச் சோ்ந்த த. மணிகண்டன் (60) உள்ளிட்ட 7 போ் சோ்ந்து ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த விஜயகுமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன் உள்ளிட்டோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் மேற்கண்ட மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சனிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

Dinamani
www.dinamani.com