மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்

News image

பெங்களுரு செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த சேதுராப்பட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :7 பிப்ரவரி 2026, 9:37 pm

பள்ளி ஆசிரியா்களின் முயற்சியால் புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் சனிக்கிழமை சுற்றுலா சென்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய பள்ளி குழந்தைகளுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டுமென்ற கனவு இருந்து வந்தது. இதை நனவாக்கும் வகையில், பள்ளி ஆசிரியா்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனா்.

இதற்காக 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு சிறப்புத் தோ்வும், விநாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெற்ற தலா இருவா் வீதம் 12 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்களின் முயற்சியால் மேற்கண்ட மாணவா்கள் சனிக்கிழமை காலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா்.