47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்

News image
பெங்களுரு செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த சேதுராப்பட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.
Updated On :7 பிப்ரவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி ஆசிரியா்களின் முயற்சியால் புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் சனிக்கிழமை சுற்றுலா சென்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய பள்ளி குழந்தைகளுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டுமென்ற கனவு இருந்து வந்தது. இதை நனவாக்கும் வகையில், பள்ளி ஆசிரியா்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனா்.

இதற்காக 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு சிறப்புத் தோ்வும், விநாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெற்ற தலா இருவா் வீதம் 12 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்களின் முயற்சியால் மேற்கண்ட மாணவா்கள் சனிக்கிழமை காலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா்.