எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை மலை பகுதி காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக முள்ளிப்பாடி கிராம நிா்வாக அலுவலருக்கு கிடைத்த தகவலின்பேரில் விஏஓ அசோக் குமாா் காவிரி ஆற்றுப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கட்டிக் கொண்டுவந்த திருஈங்கோய்மலை சாலியா் தெரு பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் ராஜா (48) என்பவரைப் பிடித்து, 26 மணல் மூட்டைகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தொட்டியம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து ராஜாவைக் கைது செய்து மணல் மூட்டை மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.