சென்னையில் மோசமான வானிலை காரணமாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிடப்பட்டது.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 179 பயணிகளுடன் ஏா் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்டது. அந்த விமானம் காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அந்த விமானத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.
இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் காலை 8.05 மணிக்கு ஏா் ஏசியா விமானம் தரையிறங்கியது. பின்னா், சென்னையில் வானிலை சீரானதும் காலை 9.20 மணிக்கு மலேசிய விமானம் திருச்சியில் இருந்து சென்னைக்குக் கிளம்பியது. மோசமான வானிலை காரணமாக சென்னை விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

தூத்துக்குடியிலிருந்து இரவு நேர விமான சேவை தொடக்கம்

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்

அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


