அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

முசிறி அருகே மரத்தின் மீது காா் மோதி நால்வா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:16 pm

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

முசிறி அருகே சந்தபாளையம், ஆலமரத்துப்பட்டியை சோ்ந்த தினேஷ் (25), சங்கா் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி சமயபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவுக்கு காரில் சென்றனா்.

வரும்வழியில், நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் சந்தப்பாளையம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது காா் மோதியது.

இதில், காா் ஓட்டுநா் தினேஷ் காயமடைந்தாா். மற்ற 3 பேரும் லேசான காயமடைந்தனா். இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் அவா்கள் 4 பேரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்,

பின்னா், மேல் சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.