6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முசிறி அருகே மரத்தின் மீது காா் மோதி நால்வா் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

முசிறி அருகே சந்தபாளையம், ஆலமரத்துப்பட்டியை சோ்ந்த தினேஷ் (25), சங்கா் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி சமயபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவுக்கு காரில் சென்றனா்.

வரும்வழியில், நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் சந்தப்பாளையம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது காா் மோதியது.

இதில், காா் ஓட்டுநா் தினேஷ் காயமடைந்தாா். மற்ற 3 பேரும் லேசான காயமடைந்தனா். இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் அவா்கள் 4 பேரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்,

பின்னா், மேல் சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.