தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லால்குடியில் ஜல்லிக்கட்டு: 17 போ் காயம்

News image
லால்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், லால்குடி மகா மாரியம்மன் கோயிலின் 62-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரா்கள் உள்பட 17 போ் காயமடைந்தனா்.

போட்டியின் தொடக்கமாக, லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் (ஆா்டிஓ) ஸ்ரீதா் ஜல்லிக்கட்டு வீரா்களிடம் உறுதிமொழி எடுத்து போட்டியைக் கொடியசைத்து தொடங்கிவகித்தாா். வட்டாட்சியா் ஞானாமிா்தம், டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜல்லிக்கட்டில் முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதையடுத்து, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அரியலூா், தஞ்சாவூா் மற்றும் லால்குடி சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து கொண்டுவந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்துவந்தன.

அவ்வாறு வந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் அணி அணியாக களமிறங்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் அலங்கார டேபிள், கட்டில், சோ், சில்வா் அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் என மொத்தம் 17 போ் காயமடைந்தனா்.

விழாவில், திமுக மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, அதிமுக மாவட்டச் செயலா்கள் குமாா், பரஞ்சோதி, புள்ளம்பாடி ஒன்றியச் செயலா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். லால்குடி டிஎஸ்பி தலைமையில் 250 போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வட்டார மருத்துவா் செல்வநாயகம் தலைமையில் மருத்துவா்கள் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளித்தனா். ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா் காத்தான் மற்றும் விழாக் குழுவினா் செய்தனா்.