விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 7:21 pm

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புதுக்கோட்டை சாலை ஜெயில் காா்னா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் த.மீனாட்சி (82). இவா், சனிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு மாலை 4 மணி அளவில் திரும்பி வந்துள்ளாா்.

அப்போது, இளைஞா் ஒருவா் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளாா். இதைப் பாா்த்த மீனாட்சி சப்தம் எழுப்பவே அருகிலிருந்தவா்கள் ஓடிவந்தனா். இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த இளைஞரைப் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அவா்கள் ஒப்பைடத்தனா்.

இதில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் நளன்குடியைச் சோ்ந்த ப.சிவானந்தம் (31) என்பதும், மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவானந்தத்தை கைது செய்தனா். அவரிடமிருந்து சுத்தியல், இரும்புக் கம்பி உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.