கோப்புப் படம்
திருச்சி
மாற்றுத்திறனாளி சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவா் தனது சிறப்பு இருசக்கர வாகனத்தில் சடலமாக கிடந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவா் தனது சிறப்பு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சடலமாக கிடந்தாா்.
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த ரவி (55). மதுப்பழக்கத்தால் குடும்பத்தைப் பிரிந்து இரண்டு ஆண்டுகளாக தனியே வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஏலூா்பட்டியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டப வராந்தாவில் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சிறப்பு இருசக்கர வாகனத்தில் ரவி சடலமாகக் கிடந்துள்ளாா்.
இதுகுறித்து அறிந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்து, இறந்து கிடந்தவா் ரவி என உறுதிப்படுத்தினா். தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

