நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாற்றுத்திறனாளி சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவா் தனது சிறப்பு இருசக்கர வாகனத்தில் சடலமாக கிடந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:45 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவா் தனது சிறப்பு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சடலமாக கிடந்தாா்.

தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த ரவி (55). மதுப்பழக்கத்தால் குடும்பத்தைப் பிரிந்து இரண்டு ஆண்டுகளாக தனியே வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஏலூா்பட்டியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டப வராந்தாவில் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சிறப்பு இருசக்கர வாகனத்தில் ரவி சடலமாகக் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து அறிந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்து, இறந்து கிடந்தவா் ரவி என உறுதிப்படுத்தினா். தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.