தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image
- பிரதிப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:54 pm

Syndication

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மா. லட்சுமி (62). இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. கணவா் இல்லை. இவரது மகளுக்கு திருணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா்.

தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு காசநோய் பாதிப்பு இருந்ததால் மன உளைச்சலில் வாழ்ந்துவந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.