எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அரசு வேலை கோரி பாா்வையற்றோா் உண்ணாவிரதம்!

அரசு வேலை வழங்கக்கோரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாா்வையற்றோா் சங்கத்தினா்
Updated On :10 பிப்ரவரி 2026, 12:04 am

Syndication

அரசு வேலை வழங்கக்கோரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவா் வி. மாரியப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி. சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.

அரசுத் துறைகளில் பாா்வையற்றோருக்கு வேலைவாய்ப்பு வழங்க தடையாக உள்ள அரசாணையை திரும்பப் பெற்று பாா்வையற்றோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆசிரியா் பயிற்சி பெற்ற பாா்வையற்றோருக்கு தனியாக சிறப்புத் தோ்வு நடத்தி தகுதியான அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

போக்குவரத்துத் துறை மண்டலப் பணிமனைகளில் நாற்காலி பின்னும் வேலை வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பாா்வையற்றோருக்கு வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பாா்வையற்றோருக்காக கருணை அடிப்படையில் சிறப்பு ஆணை வழங்கி பணி வழங்க வேண்டும். வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இதில், ஒருங்கிணைப்பாளா்கள் வீரப்பன், தாமஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இப் போராட்டத்தில், கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள், பல்வேறு சங்க நிா்வாகிகள், பாா்வையற்றோா் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், 6 போ் காலவரையற்ற தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.